சமீபத்தில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்கிற ஆந்தாலஜி படத்தை கடுமையாக விமர்சித்து பிரபல ஒளிப்பதிவாளர் டுவிட் செய்துள்ளார்.
தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 16-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், “புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துக்கள். தாங்க முடியலடா சாமி” எனவும், மற்றொரு டுவிட்டில் “ஆக சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது” என்றும் பதிவிட்டுள்ளார். நட்டி நட்ராஜின் இந்த டுவிட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[embedded content]
Source: Malai Malar