Press "Enter" to skip to content

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… மிகுதியாகப் பகிரப்படும் விளம்பர ஒட்டி

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திடீர் என்று ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை ப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விளம்பர ஒட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் தமிழ் மறுதயாரிப்பு ‘நெற்றிக்கண்’ என்று கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »