நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. இத்தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். செல்ல மகளை பார்த்து சிரித்தபடி இருக்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
[embedded content]
Source: Malai Malar