Press "Enter" to skip to content

கணவரை உளவு பார்க்கும் சமந்தா

சமீபத்தில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, கணவர் நாகசைதன்யாவை உளவு பார்ப்பதாக கூறி இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் வேலையாக நடித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, ரசிகர் ஒரு ரகசியத்தை கூறுமாறு கேட்க, அப்போது “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏன்னா என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்தான். அவர் இங்கே என்ன செய்கிறார், நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா என கணவரை உளவு பார்க்கத்தான் இந்த ஜிம்மில் சேர்ந்தேன்” என தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »