தமிழ் திரைப்படத்தில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித்தின் திரைப்படம் கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. இப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது.
தொடர்ந்து ‘ரைட்டர்’ மற்றும் ‘பொம்மை நாயகி’ படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் ‘சேத்துமான்’ எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இது எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் (IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக சேத்துமான் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது.
[embedded content]
Source: Malai Malar