Press "Enter" to skip to content

ஏலே படம் வெளியாவதில் சிக்கல்

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் ஏலே திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாக இருக்கும் நிலையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி வெளியீடு ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.

ஆசிரியர் சர்ச்சையால் திரையரங்கத்தில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் வெளியீடு செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் திரையரங்கத்தில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள்.

இந்த திடீர் சிக்கலால் ஏலே நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »