Press "Enter" to skip to content

அமீர் கான் படத்தில் நடிக்காதது ஏன்? – மனம் திறந்த விஜய் சேதுபதி

அமீர் கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிக்காததற்கான உண்மை காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகினார்.

அப்படத்திற்காக உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் தான் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள விஜய் சேதுபதி, அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது: “கொரோனா லாக்டவுன் காரணமாக அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அமீர் கான் படத்திற்கான தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »