ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரிஷ்யம் 2 படத்தை திரையரங்கம்களில் திரையிட கேரள திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ரூ.5 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரூ.75 கோடி வசூலித்தது.
திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி உள்ளது. இந்தப் படம் வருகிற 19-ந் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் கேரளா முழுவதும் திரையரங்கம்களிலும் திரிஷ்யம் 2 படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தன.
இந்த நிலையில் ஓ.டி.டியில் வரும் திரிஷ்யம் 2 படத்தை திரையரங்கம்களில் திரையிடமாட்டோம் என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் விஜயகுமார் கூறும்போது, ஓ.டி.டியில் வெளியாகும் எந்த படத்தையும் திரையரங்கம்களில் திரையிட அனுமதிக்க முடியாது. இந்த விதிமுறை மோகன்லாலின் திரிஷ்யம் உள்பட அனைத்து நடிகர்கள் படங்களுக்கும் பொருந்தும்’’ என்றார்.
[embedded content]
Source: Malai Malar