Press "Enter" to skip to content

மீண்டும் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ – அஜித் ரசிகர்கள் உற்சாகம்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-வெளியீடு ஆக உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ரஜினியின் பில்லா பட மறுதயாரிப்புகாக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், பில்லா படத்தை வருகிற மார்ச் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ-வெளியீடு செய்ய உள்ளார்களாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »