Press "Enter" to skip to content

தேர்தலில் நடிகர் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தயாரிப்பாளர்

நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘தேசியதலைவர்’ தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தேசியதலைவர் திரைப்படத்தில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கழகம் சார்பாக போட்டிட வேண்டும் என்று விருப்ப மனுவை தேசியதலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி அஇஅதிமுக கழக மேலாளர் மகாலிங்கம் அவர்களிடம் வழங்கினார். 

“தேவராக எங்கள் வரலாற்றை திரைப்படமாக எடுக்க எனக்கு பேருதவி செய்தமைக்கு நன்றி கடனாக எனது இந்த முயற்சி. ஜெ.எம்.பஷீர் தேவர் வாழ்ந்த மண்ணான ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் தேவரின் ஆசியுடன் அவருக்கு வெற்றி உறுதி” என தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »