Press "Enter" to skip to content

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்ணன் படக்குழு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

பறை இசையுடன் கிராமியப் பாடலாக உருவாகி இருந்த இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது.

‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது அடுத்த பாடலை வெளியிட உள்ளதாக கர்ணன் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மார்ச் 2ந் தேதி கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »