Press "Enter" to skip to content

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வருகிறார். அங்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை டாப்சிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் பிரபல பாலிவுட் இயக்குனர்களான அனுராக் கஷ்யப் மற்றும் விகாஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறதாம்.

மும்பை மற்றும் புனேவில் உள்ள மூவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விகாஷும், அனுராக் கஷ்யப்பும் இணைந்து நடத்தி வரும் பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பாந்தம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததால் டாப்சிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »