நடிகை ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ரோஜா, நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் ஆரவாரம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.
கபடி விளையாடிய நடிகை ரோஜா#Roja#Kabadipic.twitter.com/LfjJjAKOhi
— Sathish Maalaimalar (@SatthiEshwar)
[embedded content]
Source: Malai Malar