மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் வெற்றியடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாகவும், அந்த 3 படங்களும் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்திற்காக தயாராகி வருகிறார். நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளார்களாம்.
இதையடுத்து விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கி படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் ‘தளபதி 67’ படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, 2022-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ஆண்டில் விஜய்யின் மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
[embedded content]
Source: Malai Malar