திருமணத்துக்கு பிறகு திரைப்படத்தை விட்டு ஒதுங்கிய நடிகை பிரியாமணி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு திரைப்படத்தை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின.
இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் மிகுதியாக பகிரப்பட்டுி பரபரப்பானது. சரியான பதிலடி கொடுத்ததாக பிரியாமணியை வலைத்தளத்தில் பலர் பாராட்டியும் வருகிறார்கள்.
[embedded content]
Source: Malai Malar