Press "Enter" to skip to content

செல்பி எடுக்க வந்த ரசிகர்…. கோபத்தில் கைபேசியை பிடுங்கிய அஜித்

தன் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது கைபேசியை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது கைபேசியை பிடிங்கிக் கொண்டார்.

மேலும் கோபத்தில் ரசிகர்கள் அனைவரையும் வெளியே செல்லும்படியும் கூறியிருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »