நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் மறுதயாரிப்பு செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் ஒப்பந்தமாகி உள்ளாராம். அவர் இப்படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் அந்தகன் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் தியாகராஜன், சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar