Press "Enter" to skip to content

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசியும் போட்டு கொண்ட பின்னர் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »