Press "Enter" to skip to content

படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பவன் கல்யாண்

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘வக்கீல் சாப்’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியில் வெளியான பிங்க் படம், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண், இப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார் பவன் கல்யாண். ஏனெனில் பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நடிகர் பவன் கல்யாண், தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

இதனை உறுதி செய்து, அவரது ஜனசேனா கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »