Press "Enter" to skip to content

நடிகர் விவேக் மறைவு: ஏஆர் ரகுமான், யோகி பாபு, சேரன் இரங்கல்

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.

நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு நடிகர், இயக்குனர், இசையமைபாளர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர் அவரை நாம் இழந்துவிட்டோம் – யோகி பாபு

விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது – பார்த்திபன்.

நடிகர் விவேக் மறைவு செய்தியை கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் – இயக்குனர் சேரன் 

சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் விவேக்  – ரவீக்குமார் எம்.பி.,

திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் விவேக் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »