Press "Enter" to skip to content

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று

மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் 2-அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அதர்வா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்”  என கூறியுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »