Press "Enter" to skip to content

3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அழகியல் மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும், இதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா, அவருக்கு வக்கீல் அறிவிப்பு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் அறிவிப்பு அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார்.

இதையடுத்து நடிகை ரைசா அவரிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »