கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி திரையரங்குகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் தான் திரையரங்குகள் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெற்றிக்கண்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். இப்படத்தை கீழ் மகன் (ரவுடி) பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar