தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர், தமிழில் அறிமுகமான படம் ‘நேரம்’. இருமொழி படமான இதில் அவரது நடிப்பு பாராட்டு பெற்றது. இதையடுத்து ரிச்சி என்ற படத்தில் நடித்தார்.
இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நிவின் பாலி, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அதன்படி தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar