Press "Enter" to skip to content

கொரோனா 2வது அலை – சூர்யா, விக்ரம் படங்களுக்கு பிரச்சனை

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ‘சூர்யா 40’, ‘விக்ரம் 60’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், திரையரங்கம்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாலும் முறையான விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இதனால், பல படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’, விக்ரமின் ‘விக்ரம் 60’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முன்னெச்சரிகையோடு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல படங்களின் படப்பிடிப்புகள் இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »