Press "Enter" to skip to content

பிரபல நடிகருக்காக ரிஸ்க் எடுத்த பிரியாமணி

திருமணத்திற்கு பிறகும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பிரியாமணி பிரபல நடிகர் படம் என்பதால் ரிஸ்க் எடுத்து இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். அதோடு, தி பேமிலிமேன் 2 வெப்சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛செகண்ட் பந்துவீச்சு சுற்றில் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முக்கியமாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் எப்போதுமே வெங்கடேசுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவேன். இவருடன் நடிப்பதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வந்தபோது கால்சீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. 

பிரியாமணி – வெங்கடேஷ்

அதன்காரணமாகவே நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது பல படங்கள் கைவசம் இருந்தபோதும் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து நடித்தேன். வெங்கடேஷ் படம் என்பதால் மட்டுமே இந்த ரிஸ்க்கை எடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

நாரப்பா திரைப்படம் தமிழ் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு மறுதயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »