மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தின் இசை பணியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருக்கிறார்.
சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்புகாகும்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் பதிவுக்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும், 2 பாடல்களை முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கிருஷ்ணா இணைந்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் அதே போன்று இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar