Press "Enter" to skip to content

கொரோனாவால் தள்ளிப்போகும் பிரபாஸின் பிரம்மாண்ட படம்?

பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

ராதே ஷ்யாம் படத்தின் விளம்பர ஒட்டி

இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ராதே ஷ்யாம் படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் உருவாகி உள்ளதால் இப்படம் திரையரங்கத்தில் தான் வெளியிடப்படும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »