Press "Enter" to skip to content

பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய் ஆண்டனி

தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வரும் விஜய் ஆன்டனி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடலாசிரியர், சவுண்ட் என்ஜினியர் என்று பல தளங்களில் பதினைந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம்வருபவர் விஜய் ஆண்டனி. 

தற்போது ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன்-2’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி, ‘‘இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முகக் கவசம் அணிந்து வீட்டையும் நாட்டையும் காப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »