Press "Enter" to skip to content

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித்.

பா.இரஞ்சித்

இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் பா.இரஞ்சித். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடித்தபின் பா.இரஞ்சித் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »