Press "Enter" to skip to content

வெப் தொடருக்காக திரைப்படத்தை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா, வெப் தொடருக்காக திரைப்படத்தை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் வேலையாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. 

நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, வெப் தொடருக்காக திரைப்படத்தை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு இரண்டு பருவம்களுக்கும் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »