Press "Enter" to skip to content

பிக்பாஸ் பருவம் 5 எப்போது? – வெளியான புதிய தகவல்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு பருவம்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது பருவம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு பருவம்கள் முடிந்துள்ளன. முதல் பருவத்தில் ஆரவ், இரண்டாவது பருவத்தில் ரித்விகா, மூன்றாவது பருவத்தில் முகின், நான்காவது பருவத்தில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் தலைப்பை ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

கமல்ஹாசன்

இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் பருவம் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த பருவத்தையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »