Press "Enter" to skip to content

நிதிஷ் வீரா மறைவால் படக்குழுவினருக்கு ஏற்பட்ட சிக்கல்

பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனால் பலரையும் கவனிக்க வைத்த நிதிஷ் வீராவின் இறப்பால் ஒரு படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவரது மறைவு திரை உலகத்தினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசுரன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நிதிஷ் வீரா. அதில் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நிதிஷ் வீராவிற்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது.

அந்த படத்தில் பாதிக் காட்சிகளில் நடித்திருந்த நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.  

நிதிஷ் வீரா

நிதிஷ் வீரா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு, மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து மறுபடியும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »