கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள படத்தை நேரடியாக தொலைகாட்சியில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’.
நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு.
வெள்ளை யானை படத்தின் விளம்பர ஒட்டி
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னணி தொலைக்காட்சியுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் சமுத்திரகனி நடித்த ‘ஏலே’ படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Malai Malar