லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிஷா சுல்தானா
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar