Press "Enter" to skip to content

ஷங்கர் படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜ்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். 

தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ்

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம். இது முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றொரு இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »