Press "Enter" to skip to content

ஐதராபாத்தில் ப்ரோ டாடியை தொடங்கிய பிருத்விராஜ்

குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் ப்ரோ டாடி படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் ‘ப்ரோ டாடி’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

இப்படத்தில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.

மோகன்லால் – பிருத்விராஜ்

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையால், ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »