Press "Enter" to skip to content

போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளியை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »