Press "Enter" to skip to content

மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா

தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்களில் நடித்த பத்மபிரியா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் பத்மபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா, மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்க பத்மபிரியா ஆர்வம் காண்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »