Press "Enter" to skip to content

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி முடிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ‘திட்டம் இரண்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ‘திட்டம் இரண்டு’ படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்ட படக்குழு, இதுதொடர்பாக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

திட்டம் இரண்டு படத்தின் விளம்பர ஒட்டி

இறுதியாக இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »