தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் தெலுங்கு மறுதயாரிப்பு படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் முகவர் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா. திரைக்கதை எழுத்தாளரான நவீன் பொலிஷெட்டி இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஸ்வரூப் இயக்கியிருந்த இப்படத்தில் துப்பறிவாளராக நவீன் நடித்திருந்தார்.
துக்கடா கேஸ்களை விசாரித்து வரும் நாயகனுக்கு பெரிய கேஸ் சிக்குகிறது, அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருந்தனர். இந்தப் படத்தை தமிழில் சந்தானம் நடிப்பில் மறுதயாரிப்பு செய்து வருகின்றனர். மனோஜ் இப்படத்தை இயக்குகிறார்.
சத்தமே இல்லாமல் இதன் படப்பிடிப்பை தொடங்கி பாதி படத்துக்கு மேல் முடித்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் பெயரையும், பிற விவரங்களையும் படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
[embedded content]
Source: Malai Malar