Press "Enter" to skip to content

மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதியை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ மறுதயாரிப்பு, மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களை முடித்தப்பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருகிறார். அதன் பிறகு மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »