Press "Enter" to skip to content

இளைஞனுக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்கும் போராட்டம் வலியோர் சிலர்

‘மெரினா புரட்சி’ படத்தில் நாயகனாக நடித்த நவீன், தற்போது கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார்.

சி.ஜே.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலியோர் சிலர்’. இப்படத்தை ‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் கௌரி அனில்குமார், சுந்தர வடிவேலு, பிரசாத், பிரசாந்த் சீனிவாசன், விஜயலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நடுத்தர இளைஞனுக்கும், காவல் துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் நவீன். போலீசிடம் பணத்தை பறிகொடுத்து, அதை அவர்களிடம் இருந்து மீட்க போராடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருக்கிறார். படத்தின் காட்சிகள் நடுத்தர இளைஞர்களின் வாழ்வில், அதிகார துஷ்பரயோகம் செய்யும் ஆளுமை கொண்ட காவல் துறை அதிகாரிகளின் செயல்கள் ஏதாவது ஒன்றை ஞாபகப்படுத்தும் என்கிறார் நவீன்.

வலியோர் சிலர் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி

இப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை 7 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »