Press "Enter" to skip to content

திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, திருமண நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரையில் ஒளிப்பரப்பான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை தவிர, குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நீலிமா நடித்துள்ளார். 

நடிகை நீலிமா, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

நீலிமா

இந்நிலையில், நீலிமா தனது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »