Press "Enter" to skip to content

சூரி இல்ல திருமண விழாவில் நகைகளை திருடிய கொள்ளையன் கைது

நடிகர் சூரி இல்ல திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், தற்போது காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »