பார்டர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகர் அருண் விஜய், ஒளிப்பதிவாளர் தந்தை மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பார்டர்’. இப்படத்தில் கதாநாயகிகளாக ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பட விளம்பரம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அறிவழகன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா.பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இந்த துக்க நிகழ்வுக்கு வருகை தந்து இறுதிசடங்கு முடியும் வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன் இருந்து நடிகர் அருண் விஜய் ஆறுதல் கூறி இருக்கிறார். இதனை ஒளிப்பதிவாளர் ராஜசேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
அருண் விஜய் – ஒளிப்பதிவாளர் ராஜசேகர்
சமீபத்தில் இந்த படத்தின் பட விளம்பரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.
[embedded content]
Source: Malai Malar