Press "Enter" to skip to content

என் சாவுக்கு அஜித்தான் காரணம் – வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

தீக்குளிக்க முயன்ற பெண்

காவல் துறையினர் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது காணொளி எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »