Press "Enter" to skip to content

பெயரை மாற்றிய சமந்தா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக இரு தினங்களுக்கு முன்பாக அறிவித்தார்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.

இதையடுத்து தற்போது டுவிட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார். நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தார். தற்போது நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »