Press "Enter" to skip to content

எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் வேதனை

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் வேதனையுடன் பதிவு செய்து இருக்கிறார்.

விஷால், ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு மற்றுமொரு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான திரையரங்கம்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒலிநாடா பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் வெளியீடு செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல். அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் ஆதரவு கேட்கிறேன். திரைப்படத்திற்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 திரையரங்கம்களிலும் ஒரே படத்தையே திரையிட்டால் எப்படி?. எல்லா திரையரங்கம்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது. என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 திரையரங்கம்கள் தான். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய பகிர்வு சிறியது தான் என்றாலும் எங்களுக்கு அது கிடைத்துவிடும்.

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் திரையரங்கத்தில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்து ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.

இவ்வாறு அவர் அதில் பேசியிருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »