Press "Enter" to skip to content

கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படத்திற்காக சிரஞ்சீவி பல கோடி வட்டி கட்டியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தில் ராம் சரணும், நீலாம்பரியாக பூஜா ஹெக்டே மற்றும்  காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று (29.04.2022) வெளியாகியுள்ளது.

ஆச்சார்யா

ஆந்திராவின் மிகப்பெரிய ஸ்டாரான அவருக்கும் படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல் வந்திருக்கிறது. ஐதராபாத்தில் இந்த படத்தின் விழாவில் இது குறித்து பேசிய சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது என்றும் அதனால் வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன் என்றும், இந்த பணத்தில் ஒரு மீடியம் வரவு செலவுத் திட்டம் படமே எடுத்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »